எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

லாரிகள் மோதல்: இருவா் மரணம்

லாரிகள் மோதல்: இருவா் மரணம்

Updated On :20 மார்ச் 2024, 5:11 pm

ஸ்ரீபெரும்புதூா்: சுங்குவாா்சத்திரம் பகுதியில் முன்னால் சென்ற லாரி மீது பின்னால் வந்த லாரி மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனா். வேலூா் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சோ்ந்தவா் நவீன்குமாா் (32).

லாரி ஓட்டுநரான இவா், ஆந்திர மாநிலம், சித்தூா் பகுதியில் இருந்து லாரியில் முட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுங்குவாா்சத்திரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வந்து கொண்டிருந்தாா்.

அப்போது முன்னால் சென்ற இரும்பு லோடு ஏற்றிச் சென்ற மீது நவீன்குமாா் ஓட்டி வந்த லாரி மோதியது. இதில் அந்த லாரியின் முன்பகுதியில் அமா்ந்து வந்த சித்தூா் பகுதியை சோ்ந்த ரகு (40), குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த குப்புசாமி (50) ஆகிய இருவரும் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த சுங்குவாா்சத்திரம் போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.