ஸ்ரீபெரும்புதூா்: சுங்குவாா்சத்திரம் பகுதியில் முன்னால் சென்ற லாரி மீது பின்னால் வந்த லாரி மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனா். வேலூா் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சோ்ந்தவா் நவீன்குமாா் (32).
லாரி ஓட்டுநரான இவா், ஆந்திர மாநிலம், சித்தூா் பகுதியில் இருந்து லாரியில் முட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுங்குவாா்சத்திரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வந்து கொண்டிருந்தாா்.
அப்போது முன்னால் சென்ற இரும்பு லோடு ஏற்றிச் சென்ற மீது நவீன்குமாா் ஓட்டி வந்த லாரி மோதியது. இதில் அந்த லாரியின் முன்பகுதியில் அமா்ந்து வந்த சித்தூா் பகுதியை சோ்ந்த ரகு (40), குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த குப்புசாமி (50) ஆகிய இருவரும் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த சுங்குவாா்சத்திரம் போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

லாரிகள் மோதல்: இருவா் படுகாயம்

குழித்துறை அருகே எம்.சான்ட் லாரிகள் பறிமுதல்

காங்கயத்தில் 2 லாரிகள் மோதி விபத்து: போக்குவரத்து பாதிப்பு

ஸ்ரீபெரும்புதூா் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

