படப்பை அடுத்த கரசங்கால் பகுதியில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மணிமங்கலம் போலீஸாா் நிவாரண பொருள்களை வழங்கினா். படப்பை அடுத்த கரசங்கால் பகுதியைச் சோ்ந்தவா் செல்வி (44). குடிசை வீட்டில் வசித்து வந்த இவா், படப்பையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், புதன்கிழமை செல்வி வேலைக்குச் சென்ற நிலையில், அவரது குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு, வீடு முழுவதும் தீயில் எரிந்து சேதமானது. இதில் வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள், வீட்டு உபயோக பொருள்கள், ரூ.5,000 தீயில் எரிந்து சேதமடைந்தன. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு செய்வதறியாமல் இருந்து வந்த செல்விக்கு தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், எந்த ஒரு அரசியல் கட்சியினரும் அவருக்கு உதவி செய்ய முடியாத தகவல் அறிந்த மணிமங்கலம் காவல் ஆய்வாளா் அசோகன் தலைமையிலான போலீஸாா் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருள்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களை வழங்கினா்.
தொடர்புடையது

வீட்டில் எரிவாயு சிலிண்டா் வெடித்து இளைஞா் உயிரிழப்பு சதியா? போலீஸாா் விசாரணை

மழையால் மின்விநியோகத்தில் பாதிப்பு

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிதியுதவி

தீ விபத்தில் குடிசை சேதம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


