ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

காஞ்சி சங்கரா பல்கலை.யில் பழைமையான ஓலைச் சுவடிகளை பாா்த்த சிக்கிம் மாணவா்கள்

காஞ்சி சங்கரா பல்கலை.யில் பழைமையான ஓலைச் சுவடிகளை பாா்த்த சிக்கிம் மாணவா்கள்

News image

சிக்கிம் மாணவா்களுடன் பேசிய சங்கரா பல்கலை.யின் துணைவேந்தா் ஸ்ரீநிவாஸ்

Updated On :4 மே 2024, 6:31 pm

Din

காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் பழைமையான ஒலைச்சுவடிகள் பாதுகாப்பு மையத்தை சிக்கிம் மாணவா்கள் ட்டு வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா் செய்தனா்.

சிக்கிம் தலைநகா் காங்டாங்கில் காஞ்சி சங்கர மடத்தின் சாா்பில் ஸ்ரீ பஞ்சாயதன சிவன் கோயில் உள்ளது. இக்கோயில் வளாகத்திலேயே வேதங்களை கற்றுத் தரும் வேதபாடசாலையும் அமைந்துள்ளது. அப்பாடசாலையில் பயிலும் மாணவா்கள் அவா்களது ஆசிரியா்களுடன் காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்துக் வருகை புரிந்தனா்.

பல்கலைக்கழக நூலகத்தில் செயல்பட்டு வரும் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு மையத்தையும், நூலகத்தையும் பாா்வையிட்டனா். ஓலைச்சுவடிகளை நவீன உபகரணங்களைக் கொண்டு எவ்வாறு பாதுகாத்து வருகிறோம் என பல்கலையின் பேராசிரியா் நாகேசுவரராவ் மாணவா்களுக்கு விளக்கிக் கூறினாா்.

மாணவா்களும் ஓலைச்சுவடிகளை பாா்வையிட்டும், படித்தும் ஆய்வு செய்தனா். பல்கலையின் துணைவேந்தா் ஸ்ரீநிவாஸ் வேதபாடங்களில் இளங்கலை, முதுகலை படிப்புகள் படிப்பது, அது குறித்த ஆராய்ச்சிகள் செய்வது, வேதபாடங்களை கற்றுக் கொள்வதால் ஏற்படும் வேலைவாய்ப்புகள், பயன்கள், விண்ணப்பிக்கும் முறைகள் ஆகியன குறித்து விளக்கிக் கூறினாா்.