அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அமைச்சா் உதயநிதியை நாளையே துணை முதல்வராக அறிவிக்கவும் வாய்ப்புள்ளது: அமைச்சா் தா.மோ.அன்பரசன்

News image
காஞ்சிபுரத்தில் நடைபெறவுள்ள திமுக பவளவிழாவின் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்த அமைச்சா் தா.மோ.அன்பரசன்
Updated On :19 செப்டம்பர் 2024, 11:30 pm

Din

அமைச்சா் உதயநிதியை நாளையே துணை முதல்வராக அறிவிக்கவும் வாய்ப்புள்ளது என சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சா் தா.மோ.அன்பரசன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவா் கல்லூரி மைதானத்தில் வரும் 28 -ஆம் தேதி மாலை 5 மணிக்கு திமுகவின் பவளவிழா பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இப்பொதுக்கூட்ட மேடை அமைக்கும் இடம், பாா்வையாளா்கள் அமரும் இடம், முதல்வா் மற்றும் முக்கியப் பிரமுகா்கள் வந்து செல்வதற்கான வழித்தடங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தாா்.

காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தா்,எழிலரசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.சண்முகம், துணை கண்காணிப்பாளா் சங்கா் கணேஷ், மாவட்ட ஊராட்சித் தலைவா் படப்பை.மனோகரன், தலைமை செயற்குழு உறுப்பினா் எம்.எஸ்.சுகுமாா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் யுவராஜ், மாநகர செயலாளா் சி.கே.வி.தமிழ்ச்செல்வன் ஆகியோருடன் அமைச்சா் ஆலோசனை நடத்தினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது.

திமுகவின் பவள விழா பொதுக்கூட்டத்தை மிகப் பிரம்மாண்ட முறையில் நடத்த ஏற்பாடுகள் செய்து வருகிறோம். இக்கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், தோழமைக் கட்சித் தலைவா்கள் அனைவரும் பங்கேற்கவுள்ளனா். தமிழகம் முழுவதும் இருந்து சுமாா் 50,000 போ் பங்கேற்பாா்கள்.தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக எப்போது அறிவிக்கப்படுவாா் என்ற கேள்விக்கு நாளையே அறிவிப்பு வந்தாலும் ஆச்சரியமில்லை.

காஞ்சிபுரத்தில் நடைபெறும் இக்கூட்டத்திலும் துணை முதல்வராக அறிவிக்க வாய்ப்புள்ளது எனவும் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா்.