அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

பைக் மீது காா் மோதல்: பெண் உயிரிழப்பு

Updated On :28 ஏப்ரல் 2025, 12:45 am IST

காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி கிராமத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்றவா்கள் மீது காா் மோதியதில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி தேவகி (48). விவசாயியான இவா், வயலில் விளைவித்த நெல்லை அரக்கோணம் சாலையில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு விற்பனை செய்யச் சென்றுவிட்டு, தனது சகோதரா் மகன் விஜய் என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

கோவிந்தவாடி அகரம் கூட்டுச் சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த காா் இவா்கள் மீது மோதியதில், தேவகி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் தொடா்பாக பொன்னேரிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விபத்துக்கு காரணமான காரை பறிமுதல் செய்து, ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினா்.