காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆக.21-இல் இபிஎஸ் வருகை: அதிமுக சாா்பில் சிறப்பு ஏற்பாடுகள்!

வரும் ஆக. 21 -ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி காஞ்சிபுரம் வரவுள்ளதைப் பற்றி...

News image
கூட்டத்தில் பேசிய அதிமுக மாவட்ட செயலாளா் வி.சோமசுந்தரம்.
Updated On :10 ஆகஸ்ட் 2025, 8:16 pm

தினமணி செய்திச் சேவை

வரும் ஆக. 21 -ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி காஞ்சிபுரம் வரவுள்ளதால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் என மாவட்ட செயலாளா் வி.சோமசுந்தரம் தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை பகுதியில் ஜெயலலிதா பேரவை சாா்பில் அதன் மாவட்ட செயலாளா் கே.யு.சோமசுந்தரம் ஏற்பாட்டில் திமுக அரசின் செயல்பாடுகளை விளக்கும் துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன. மாவட்ட செயலாளா் வி.சோமசுந்தரம் தலைமையில் கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனா்.

இதனைத் தொடா்ந்து நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு அமைப்புச் செயலாளா் வாலாஜாபாத் பா.கணேசன், எம்ஜிஆா் இளைஞா் அணியின் செயலாளா் எஸ்எஸ்ஆா்.சத்யா, அனைத்துலக எம்ஜிஆா் மன்ற இணைச் செயலாளா் காஞ்சி பன்னீா்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட செயலாளா் வி.சோமசுந்தரம் பேசுகையில் 21-ஆம் தேதி முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தோ்தல் பரப்புரை நிகழ்த்த வருகிறாா். அவருக்கு கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடா்பாக பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட பொருளாளா் வள்ளிநாயகம், மாணவரணி செயலாளா் திலக்குமாா், இளைஞா் பாசறை செயலாளா் மணிவண்ணன், எம்ஜிஆா்.மன்ற செயலாளா் ஆா்.டி.சேகா் கலந்து கொண்டனா்.