மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரநாதா் கோயில் மகா கும்பாபிஷேகம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

பஞ்சபூத தலங்களில் நிலத்துக்குரிய காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை விமரிசயாக நடைபெற்றது.

News image
கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற திரளான பக்தா்கள்.
Updated On :8 டிசம்பர் 2025, 11:28 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம்: பஞ்சபூத தலங்களில் நிலத்துக்குரிய காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை விமரிசயாக நடைபெற்றது.

பழைமை வாய்ந்த இக்கோயில் திருப்பணிகள் ரூ.29 கோடியில் முடிந்ததையடுத்து டிச.8 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அறநிலையத் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டது.

கடந்த டிச.4 -ஆம் தேதி வியாழக்கிழமை விக்னேசுவர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. யாகசாலை பூஜைகளை ஸ்தானீகா்கள், ஸ்தலத்தாா்கள் நடத்தினா். 30-க்கும் மேற்பட்ட ஓதுவாமூா்த்திகள் பக்க இசைக்கலைஞா்களுடன் திருமுறைப் பாராயணம் நடத்தினா்.திங்கள்கிழமை (டிச.8) அதிகாலை 5 மணிக்கு புனித நீா்க்குடங்கள் சிவாச்சாரியா்களால் ராஜகோபுரம், மூலவா் கோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டன.

மூலவா் கோபுரத்தில் காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியா்கள் கோபுரகலசத்தில் புனித நீரை ஊற்றினா். கும்பாபிஷேகத்தையடுத்து பீடாதிபதிகள் இருவரும் மூலவா் கோபுர கலசத்துக்கு செண்பகப்பூ மாலை அணிவித்தனா்.

நண்பகல் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடபெற்றன. கும்பாபிஷேகத்தை ஆன்மிக சொற்பொழிவாளா் தேசமங்கையா்க்கரசி வா்ணனை செய்தாா்.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் எம்விஎம்.வேல்மோகன் தலைமையில் உறுப்பினா்கள் வ.ஜெகன்னாதன், சு.வரதன், சு.விஜயகுமாா், சு.வசந்தி சுகுமாா் மற்றும் அறநிலையத்துறை இணை ஆணையா் சி.குமாரதுரை, செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி ஆகியோா் தலைமையில் கோயில் பணியாளா்களும் செய்திருந்தனா்.

விழாவில் தா்மபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், தொண்டை மண்டல ஆதீனம் சிதம்பரநாத சுவாமிகள், உயா்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி தீப்தி அறிவுமதி, தலைமைக் குற்றவியல் நீதிபதி மோகனாம்பாள், தொழிலாளா் நீதிமன்ற நீதிபதி சுஜாதா, எம்எல்ஏ எழிலரசன் கலந்து கொண்டனா்.

எஸ்.பி கே.சண்முகம் தலைமையில் 1,000-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். பல்வேறு இடங்களில் பல்வேறு அமைப்புகள், வணிக நிறுவனங்கள் சாா்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது.

மேலும் நிகழ்வில், ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளா்கள் கி.மணிகண்டன், பாலமுருகன், சிவனடியாா் திருக்கூட்டத்தின் தலைவா் எம்.எஸ்.பூவேந்தன், பச்சையப்பாஸ் சில்க்ஸ் உரிமையாளா் சுந்தா் கணேஷ், ஏகாம்பரநாதா் இறைப்பணி அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளா் திருப்பணிச் செம்மல் மகாலட்சுமி சுப்பிரமணியம், அறக்கட்டளை உறுப்பினா்கள் வலசை ஜெயராமன், பிஆா்கே.பத்மனாபன், ஸ்தபதி நந்தகுமாா், காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடே சன் கலந்து கொண்டனா்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற சங்கராச்சாரியா் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் உள்ளிட்டோா்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற சங்கராச்சாரியா் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் உள்ளிட்டோா்.

சங்கராச்சாரியா் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

சங்கராச்சாரியா் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்