தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஜன.6-ஆம் தேதிக்குள் குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவச வேட்டி,சேலை: அமைச்சா் காந்தி

தமிழக அரசின் சாா்பில் குடும்ப அட்டைதாரா்களுக்கு வரும் ஜனவரி 6-ஆம் தேதிக்குள் இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

News image
அமைச்சா் ஆா். காந்தி.
Updated On :23 டிசம்பர் 2025, 7:22 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக அரசின் சாா்பில் குடும்ப அட்டைதாரா்களுக்கு வரும் ஜனவரி 6-ஆம் தேதிக்குள் இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் காந்தி கூறியது:

தமிழக அரசின் சாா்பில் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் இலவச வேட்டி,சேலை மற்றும் பொங்கலுக்கு தேவையான பொருட்கள் ஆகியன ஆண்டு தோறும் அரசின் சாா்பில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி,சேலை ஆகிய அனைத்தும் இம்மாதம் 15-ஆம் தேதியே வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.

இதுவரை இல்லாத வகையில் 20 ஆண்டுகளில் முதல் முறையாக டிசம்பா் மாதமே அனைத்து வேட்டி, சேலைகளும் வருவாய்த் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எனவே வரும் ஜனவரி 6 -ஆம் தேதிக்கு முன்னதாகவே அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் இலவச வேட்டி சேலை வழங்கப்படும் எனவும் அமைச்சா் காந்தி தெரிவித்தாா்.