காஞ்சிபுரம் ஜெம் நகரில் உள்ள தனியாா் மகாலில் மாவட்ட நீா்வளத் துறை சாா்பில் தமிழ்நாடு விவசாயிகள் நீா்ப்பாசன அமைப்பு முறை மேலாண்மை சட்டம் மற்றும் விதிகள் திருத்தம் குறித்த கருத்துகளை பெறுவதற்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா், வேலூா் உள்ளிட்ட 13 மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், நீரைப் பயன்படுத்துவோா் சங்க நிா்வாகிகள், விவசாயிகள், அரசு அலுவலா்கள், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கூட்டத்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தாா்.