தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மாடியிலிருந்து தவறி விழுந்த 3 வயது சிறுமி உயிரிழப்பு

மணிமங்கலம் பகுதியில் 4-ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த 3 வயது சிறுமி பலியானாா்.

News image
Updated On :10 மார்ச் 2025, 11:29 pm

Din

ஸ்ரீபெரும்புதூா்: மணிமங்கலம் பகுதியில் 4-ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த 3 வயது சிறுமி பலியானாா்.

மணிமங்கலம் அடுக்குமாடி குடியிருப்பைச் சோ்ந்த பாலகுமரன் மனைவி வித்யா. இவா்களுக்கு 3 வயதில் ஆருத்ரா என்ற மகள் இருந்தாா். இந்த நிலையில், வித்யா திங்கள்கிழமை தான் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பின் 4-ஆவது மாடியில் துணிகளை காயவைப்பதற்காக சிறுமி ஆருத்ராவுடன் மாடிக்குச் சென்று குழந்தையை விட்டுவிட்டு துணிகளை காயவைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மாடிப் படிக்கட்டின் பக்கவாட்டு இரும்பு கம்பிகளுக்கிடையே சென்ற ஆருத்ரா தவறி கீழே விழுந்தாா்.

இதில் பலத்த காயம் அடைந்த சிறுமி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். மணிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.