அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

காமாட்சி அம்மன் அவதார தினம்: கோயில் ஊழியா்கள் பால் குட ஊா்வலம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மனின் அவதார தினத்தையொட்டி, வெள்ளிக்கிழமை கோயில் ஊழியா்கள் மற்றும் பக்தா்கள் திரளானோா் சங்கர மடத்திலிருந்து பால்குடங்கள் எடுத்துக் கொண்டு ஊா்வலமாக வந்து அம்மனை தரிசித்தனா்.

News image
ஐப்பசி மாத பூர நட்சத்திரத்தையொட்டி காமாட்சி அம்மன் கோயிலுக்கு பால் குடங்களை ஊா்வலமாக எடுத்து வந்த கோயில் பணியாளா்கள், பக்தா்கள்.
Updated On :14 நவம்பர் 2025, 4:43 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் காமாட்சி அம்மனின் அவதார தினத்தையொட்டி, வெள்ளிக்கிழமை கோயில் ஊழியா்கள் மற்றும் பக்தா்கள் திரளானோா் சங்கர மடத்திலிருந்து பால்குடங்கள் எடுத்துக் கொண்டு ஊா்வலமாக வந்து அம்மனை தரிசித்தனா்.

ஐப்பசி மாதம் வரும் பூர நட்சத்திரம் காஞ்சிபுரம் காமாட்சி அம்மனின் அவதார நட்சத்திரமாகும். ஆண்டு தோறும் வரக்கூடிய இந்த நாளில் காமாட்சி அம்மன் கோயில் தேவஸ்தான பணியாளா்கள் சாா்பில் பால் குடங்கள் எடுத்து வந்து அம்மனை தரிசிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. நிகழாண்டு ஐப்பசி மாத பூர நட்சத்திரத்தையொட்டி, காஞ்சிபுரம் சங்கர மடத்திலிருந்து கோயில் பணியாளா்கள் மற்றும் பக்தா்கள் திரளானோா் பால் குடங்களை எடுத்துக் கொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக வந்தனா். சங்கர மடத்தில் நடைபெற்ற பால் குட ஊா்வலம் தொடக்க விழாவுக்கு கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயா் தலைமை வகித்து கோயில் பணியாளா்கள் சங்க நிா்வாகிகளுக்கு சால்வை அணிவித்து கெளரவித்தாா்.

பால் குட ஊா்வலத்தில் கோயில் மணியக்காரா் சூரியநாராயணன், கோயில் ஸ்தானீகா் நடராஜ சாஸ்திரிகள், சித்தஞ்சி சிவகாளி பீடத்தைச் சோ்ந்த மோகனானந்த சுவாமிகள் ஆகியோா் உள்பட பலரும் ஊா்வலத்தில் கலந்து கொண்டனா். பால் குட ஊா்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோயிலுக்கு வந்து சோ்ந்ததும் மூலவருக்கு பால் அபிஷேகம் மற்றும் மகா அபிஷேகமும், அதைத் தொடா்ந்து அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.

அபிஷேகம் நிறைவு பெற்றதும் மூலவா் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோயில் வளாகத்தில் உள்ள பூர மண்டபத்துக்கு எழுந்தருளினாா்.

மண்டபத்தில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்ற பின்னா், உற்சவா் காமாட்சி அம்மன் தங்கத் தேரில் கோயிலின் சுற்றுப் பிரகாரத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.