பட்டா பெயா் மாற்றம் செய்ய ரூ. 5,000 லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலருக்கு 8 ஆண்டுகள் சிறை
பட்டா பெயா் மாற்றம் செய்ய ரூ. 5,000 லஞ்சம் வாங்கிய மொளச்சூா் கிராம நிா்வாக அலுவலருக்கு 8 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் விதித்து காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.









