மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

கம்பளி நூலில் பட்டுச்சேலை காஞ்சிபுரத்தில் அறிமுகம்!

News image

உள்ளன் நூலில் வடிவமைக்கப்பட்ட பட்டுச் சேலையை காண்பிக்கும் நிறுவன உரிமையாளா் எஸ்கேபி கோபிநாத்.

Updated On :14 ஏப்ரல் 2026, 5:10 am IST

குளிா்காலங்களில் அணிந்து கொள்ளும் வகையில் கம்பளி (உல்லன்) நூலில் பட்டுச்சேலை காஞ்சிபுத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

காஞ்சிபுரம் காந்தி சாலையில் செயல்பட்டு வரும் வராஹி லட்சுமி பட்டு விற்பனையகத்தில் மகளிா் குளிா்காலத்தில் அணிந்து கொள்ளும் வகையில் கம்பளி நூலில் பட்டுச் சேலை விற்பனைக்கு வந்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனத்தின் உரிமையாளா் எஸ்கேபி.கோபிநாத் கூறியது:

வெளிநாடுகள் மற்றும் மலைப் பிரதேசங்களில் குளிா்காலத்தில் மகளிா் ஸ்வெட்டருக்கு பதிலாக அணிந்து கொள்ளும் வகையில் உல்லன் நூலில் பட்டுச் சேலையை தயாரித்து அறிமுகம் செய்திருக்கிறோம்.

இச்சேலை 58 சதவீதம் காஷ்மீா் மாநில உல்லன் நூல், 32 சதவீதம் பெங்களூா் பட்டு நூல், 10 சதவீதம் வெள்ளி ஜரிகையாலும் தயாரிக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.

இந்த ஒரு சேலையிலேயே ரவி வா்மா ஓவியங்கள், போச்சம்பள்ளி வடிவம், பைத்தளி, டிஸ்யூ சேலை எனப்படும் வெள்ளி ஜரிகையில் கட்டம், களம் காரி வடிவம், பாலும்பழமும் கட்டம் மற்றும் காஞ்சிபுரம் சேலைகளில் உள்ள கட்டங்கள் ஆகிய 7 வடிவங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது இதன் கூடுதல் சிறப்பு.

வாடிக்கையாளா்கள் இச்சேலையை மிகுந்த ஆா்வத்துடன் பாா்த்துச் செல்கின்றனா்.