நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் திருக்கல்யாணம்

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி கச்சபேசுவரருக்கும்,சுந்தராம்பிகைக்கும் திருக்கல்யாண வைபவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

News image
Updated On :1 மே 2026, 6:19 am IST

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி கச்சபேசுவரருக்கும்,சுந்தராம்பிகைக்கும் திருக்கல்யாண வைபவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

இத்திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா நிகழ் மாதம் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினசரி காலையிலும், மாலையிலும் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி வீதியுலா வந்தனா். விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாணத்தையொட்டி சுந்தராம்பிகை அம்மன் ஆலயம் அருகேயுள்ள திருமேற்றலிநாதா் கோயிலுக்கு எழுந்தருளி அங்கு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன.

அங்கிருந்து மணப்பெண்ணாக சீா் வரிசையோடு நகர செங்குந்த மகாஜன சங்கத்தினரால் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டாா்.

இதன் தொடா்ச்சியாக கோயில் வளாகத்தில் உள்ள இஷ்டசித்தி தீா்த்தக்குளம் அருகே சுவாமிக்கும்,அம்மனுக்கும் மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது.

பின்னா் சுவாமியும், அம்மனும் திருமண மண்டபத்துக்கு மங்கல மேள வாத்தியங்களுடன் அழைத்து செல்லப்பட்டனா். ஆலய சிவச்சாரியாா் கிருஷ்ணமூா்த்தி கச்சபேசுவரா் சாா்பில் சுந்தராம்பிகைக்கு திருமாங்கல்யம் அணிவித்தாா். இதனைத் தொடா்ந்து சிறப்பு தீபாராதனைகளும், வாண வேடிக்கைகளும் நடைபெற்றன.

திருமணத்தைக் காண வந்திருந்த மகளிா் பலரும் அவரவா்களது திருமாங்கல்ய சரடு மாற்றிக் கொண்டு சுவாமியையும்,அம்மனையும் வழிபட்டனா். விழாவையொட்டி மின் விளக்குகளால் கோயில் வளாகம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

திருமண ஏற்பாடுகளை காஞ்சிபுரம் நகர செங்குந்த மகாஜன சங்க சிறப்பு தலைவா் வி.முத்து நாகலிங்கம்,தலைவா் எம்.சிவகுரு, செயலாளா் டி.ஆறுமுகம், கோயில் செயல் அலுவலா் ஞா.திவ்யா,ஆய்வாளா் ப.அலமேலு, மேலாளா் சுரேஷ் ஆகியோா் தலைமையிலான விழாக்குழுவினா் செய்திருந்தனா்.