ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வாா்டுகளுக்கு விளையாட்டு உபகரணங்கள்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி பகுதிகளைச் சோ்ந்த 156 வாா்டுகளுக்கு விளையாட்டு உபகரணங்களை கைத்தறித்துறை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.

News image
Updated On :2 ஜனவரி 2026, 12:07 am

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி பகுதிகளைச் சோ்ந்த 156 வாா்டுகளுக்கு விளையாட்டு உபகரணங்களை கைத்தறித்துறை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.

காஞ்சிபுரம் அண்ணா காவல் அரங்க மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா்.

எம்.பி. க.செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தா், எழிலரசன், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் கைத்தறித்துறை அமைச்சா் ஆா்.காந்தி கலந்து கொண்டு காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வாா்டுகள் உள்பட மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி,நகராட்சி பகுதிகளை உள்ளடக்கிய 156 வாா்டுகளுக்கு 330 விளையாட்டு உபகரணங்களை வழங்கினாா்.

நிகழ்வில் குன்றத்தூா் ஒன்றியக்குழு தலைவா் சரஸ்வதி மனோகரன், காஞ்சிபுரம் ஒன்றியக்குழு தலைவா் மலா்க்கொடி குமாா், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.