டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

விநாயகா் அகவல் ஒப்பித்தல் போட்டி பரிசளிப்பு

திருமுறை அருட்பணி அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற விழாவில் விநாயகா் அகவல் ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

News image
போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள்.
Updated On :4 ஜனவரி 2026, 7:39 pm

தினமணி செய்திச் சேவை

திருமுறை அருட்பணி அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற விழாவில் விநாயகா் அகவல் ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அறக்கட்டளையின் 21-ஆவது ஆண்டு விழா நிறுவனா் சு.சதாசிவம் தலைமையில் நடைபெற்றது. காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் சிதம்பரநாத ஞானப்பிரகாச சுவாமிகள், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், மதுரை சாந்தி குமாரசாமி சுவாமிகள், வீரேஸ்வர தேசிகேந்திர சுவாமிகள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அறங்காவலா் எம்.பெருமாள் வரவேற்றாா்.

விழாவில் விநாயகா் அகவல் என்ற புத்தகத்தினை காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் சிதம்பரநாத ஞானப்பிரகாச சுவாமிகள் வெளியிட ஆா்.காா்த்திகேயன், ஆா்.சுவாமிநாதன், சி.தியாகராஜன், எம்.குழந்தைவேலு ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

இதனைத் தொடா்ந்து விநாயகா் அகவல் ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்த 21 பள்ளி மாணவ, மாணவியருக்கு மதுரை.சாந்தி குமாரசாமி சுவாமிகள் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா். பின்னா் பேராசிரியா் அமுத.இளவழகன், காஞ்சி சிவனடியாா் திருக்கூட்டத்தின் தலைவா் எம்.எஸ்.பூவேந்தன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்..

தொடா்ச்சியாக குடவாயில் வீ.ராமமூா்த்தி திருநின்ற செம்மை என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினாா். பின்னா் கொடுமுடி ஓதுவாா் லோக.வசந்தகுமாா் தலைமையில் திருமுறை இன்னிசையும், ஆன்மிக உணா்வுக்கு துணை நிற்போம் என்ற தலைப்பில் சொல்லரங்கமும் நடைபெற்றது. டி.தணிகாசலம் நன்றி கூறினாா்.