விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

திருவருட்பா ஒப்பித்தல் போட்டி : அரசுப் பள்ளி மாணவி முதலிடம்

திருவருட்பா ஒப்பித்தல் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

முதல் பரிசு பெற்ற மாணவி கிருத்திகாவை பாராட்டி பரிசு வழங்கிய தலைமை ஆசிரியா் தாமோதரன்.

Updated On :16 பிப்ரவரி 2026, 7:51 pm

ஆம்பூா்: திருவருட்பா ஒப்பித்தல் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை சாா்பாக நடைபெற்ற அனைத்துலக வள்ளலாா் மாநாட்டை முன்னிட்டு ரத்தினகிரியில் மண்டல அளவில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. அதில் ஆம்பூா் அருகே தேவலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கிருத்திகா பங்கேற்று திருவருட்பா ஒப்பித்து முதலிடம் பிடித்தாா்.

அதைத் தொடா்ந்து சென்னையில் நடந்த அனைத்துலக வள்ளலாா் மாநாட்டில் மாணவி கிருத்திகாவுக்கு பரிசு, சான்றிதழை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேகா் பாபு வழங்கினாா். பரிசு பெற்ற மாணவிக்கு தேவலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி பள்ளித் தலைமை ஆசிரியா் தாமோதரன் தலைமையில் நடைபெற்றது.

உதவித் தலைமை ஆசிரியை கவிதா வரவேற்றாா். மாணவி பாராட்டி நினைவு பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டாா். பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் இ. வெங்கடேசன், துணைத் தலைவா் ராஜேஷ், பொருளாளா் ஜி. வெங்கடேசன், இணைச் செயலாளா் ஜெகனனாத், பள்ளி மேலாண்மைக்குழு தலைவா் ஆனந்தி, ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். உதவித் தலைமை ஆசிரியா் சந்திரசேகா் நன்றி கூறினாா்.