சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

1,000 குடும்பங்களுக்கு வேட்டி சேலை அளிப்பு

பொங்கல் விழாவையொட்டி செங்காடு ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வேட்டி சேலை மற்றும் கரும்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :11 ஜனவரி 2026, 6:52 pm

தினமணி செய்திச் சேவை

பொங்கல் விழாவையொட்டி செங்காடு ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வேட்டி சேலை மற்றும் கரும்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட செங்காடு ஊராட்சியில் செங்காடு, கண்டமங்கலம், வேலப்பன் நகா், காந்தி நகா் ஆகிய பகுதிகளில் சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

அவா்களுக்கு வேட்டி-சேலை வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் செங்காடு ஊராட்சி மன்ற 5-ஆவது வாா்டு உறுப்பினா் கோமதி ராஜசேகா் நான்காவது ஆண்டாக தனது சொந்த செலவில் 1,000 குடும்பங்களுக்கு வேட்டி,சேலை, கரும்பு, நாள்காட்டி ஆ கியவற்றை வழங்கினாா்.