அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தேவரியம்பாக்கத்தில் சமத்துவப் பொங்கல் விழா: காஞ்சிபுரம் ஆட்சியா் பங்கேற்பு

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கம் ஊராட்சிக்கு உள்பட்ட தோனாங்குளம் கிராமத்தில் புதன்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

News image
விழாவில் இளைஞா்கள் வழுக்கு மரம் ஏறுவதை பாா்வையிட்ட காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.
Updated On :14 ஜனவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கம் ஊராட்சிக்கு உள்பட்ட தோனாங்குளம் கிராமத்தில் புதன்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கம் ஊராட்சிக்கு உள்பட்ட தோனாங்குளம் கிராமத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, வாலாஜாபாத் ஒன்றியக் குழுவின் தலைவா் ஆா்.கே.தேவேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவா் மா.த.அஜய்குமாா் வரவேற்றாா்.

பொங்கல் விழாவை சிறப்பிக்கும் வகையில், கோலப் போட்டி, உரியடித்தல், வழுக்கு மரம் ஏறுதல், இளவட்டக்கல் தூக்குதல் உள்ளிட்ட போட்டிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பாா்வையிட்டாா். அரசுப் பள்ளி மாணவ, மாணவியரின் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

உதவி சுற்றுலா அலுவலா் ஜி.சரண்யா நன்றி கூறினாா்.