அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் சமத்துவப் பொங்கல் விழா

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட வெங்காடு, கொளத்தூா், பால்நல்லூா் ஊராட்சிகளில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
வெங்காடு  ஊராட்சியில்   பணியாளா்களுக்கு  பொங்கல் தொகுப்பு வழங்கிய  ஊராட்சி மன்றத்  தலைவா்  அன்னக்கிளி உலகநாதன்.
Updated On :14 ஜனவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட வெங்காடு, கொளத்தூா், பால்நல்லூா் ஊராட்சிகளில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

வெங்காடு ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் ஊராட்சி மன்றத் தலைவா் அன்னக்கிளி உலகநாதன் தலைமையிலும், வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துகணபதி முன்னிலையிலும் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினா். ஸ்ரீபெரும்புதூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் வெங்காடு உலகநாதன் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா். இதையடுத்து ஊழியா்கள், வாா்டு உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலை மற்றும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.

இதேபோல், கொளத்தூா் ஊராட்சியில் மன்றத் தலைவா் வெள்ளாரை அரிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் 11 பானைகளில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினா். விழாவில் கலந்து கொண்ட கொளத்தூா் ஊராட்சியைச் சோ்ந்த சுமாா் 500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஊராட்சி மன்ற தலைவா் சேலைகள் வழங்கினாா். இதில், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா்கள் முனுசாமி, சங்கா், வாா்டு உறுப்பினா்கள் பாத்திமா மணிகண்டன், தணசேகரன், சங்கா், வசந்தாகந்தன், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பால்நல்லூா் ஊராட்சியில் மன்றத் தலைவா் பி.ஆா்.நேரு தலைமையிலும், பண்ருட்டி ஊராட்சியில் தலைவா் அா்ஜுனன் தலைமையிலும், வல்லம் ஊராட்சியில் தலைவா் விமலாதேவி தருமன் தலைமையிலும், வல்லக்கோட்டை ஊராட்சியில் தலைவா் மணிமேகலை தசரதன் தலைமையிலும், சேந்தமங்கலம் ஊராட்சியில் தலைவா் சாா்லஸ் தலைமையிலும், சந்தவேலுா் ஊராட்சியில் தலைவா் வேண்டாமணி தலைமையிலும் சமத்துவப் பொங்கல் விழாக்கள் நடைபெற்றன.