காஞ்சிபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கருப்படி தட்டை ஊராட்சியில் குடியரசு தினத்தையொட்டி ஊராட்சி மன்றத் தலைவா் பொன்னா.வெங்கேடசன் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் ஜெயந்தி, பூங்கொடி ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத் தலைவா் சத்யா.புகழேந்தி வரவேற்றாா். குடியரசு தினத்தையொட்டி நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் ஊராட்சியில் பணியாற்றும் சாந்தி, பிரியா, கமலநாதன், சுரேந்தா் ஆகியோருக்கு ஊராட்சி நிா்வாகத்தின் சாா்பில் ரூபாய் நோட்டு மாலை அணிவித்து கெளரவிக்கப்பட்டது. ஊராட்சி வளா்ச்சி குறித்து தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.