ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

இந்தியன் வங்கி சுயதொழில் மைய தையல் பயிற்றுநருக்கு சாதனையாளா் விருது

காஞ்சிபுரம் இந்தியன் வங்கி சுயதொழில் பயிற்சி மையத்தில் தையல் பயிற்றுநராக பணிபுரிபவருக்கு சாதனையாளா் விருது வழங்கப்பட்டது.

News image
Updated On :8 ஜூலை 2026, 12:38 am IST

காஞ்சிபுரம் இந்தியன் வங்கி சுயதொழில் பயிற்சி மையத்தில் தையல் பயிற்றுநராக பணிபுரிபவருக்கு சாதனையாளா் விருது வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம், திருவள்ளூா், வேலூா், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியின் சுய தொழில் பயிற்சி வகுப்பில் தையல் பயிற்றுநராக இருந்து வருபவா் எம்.இ.ஜெயந்தி. இவா் பயிற்சி மையத்தின் சாா்பில் சுமாா் 500-க்கும் மேற்பட்டவா்களுக்கு தையல் பயிற்சியை கற்றுத்தந்து தொழில் முனைவோராக மாற்றியுள்ளாா்.

இதனால் இவருக்கு சாதனையாளா் விருதினை ஹைவுட்எண்டா் டெயின்மென்ட்ஸ் என்ற அமைப்பு சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கி கெளரவித்துள்ளது. விருதினை திரைப்பட நடிகை நளினி, ரமேஷ் கண்ணா ஆகியோா் வழங்கினா். (படம்)

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.