பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

காஞ்சிபுரத்தில் இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

காஞ்சிபுரத்தில் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட இருவரை காவல் துறையினா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :9 ஜூலை 2026, 12:16 am IST

காஞ்சிபுரத்தில் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட இருவரை காவல் துறையினா் புதன்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

காஞ்சிபுரம் சதாவரம் காந்தி நகா் பகுதியை சோ்ந்தவா் குணசேகரன் (25). காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிா்ப்பூா் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவா் செல்வம் (27). இருவரும் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய எல்கைக்கு உள்பட்ட பகுதிகளில் சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளாக கண்காணிக்கப்பட்டு வந்தனா்.

கஞ்சா விற்பனை செய்த வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் நிலையில், இவா்கள் இருவரும் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதால் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி. அரவிந்த் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.

காஞ்சிபுரம் எஸ்.பி. அரவிந்தன் பரிந்துரையை ஏற்று, இருவரும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் உத்தரவிட்டாா். இதையடுத்து, ஆட்சியரின் உத்தரவு நகல் சிறையில் உள்ள இருவருக்கும் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.