கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

காளிகாம்பாள் கோயிலில் மகா சண்டி யாகம்

காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி எனப்படும் காளிகாம்பாள் கோயிலில் ஆஷாட நவராத்திரியையொட்டி புதன்கிழமை நவசண்டி யாகம் நடைபெற்றது.

News image

காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி எனப்படும் காளிகாம்பாள் கோயிலில் ஆஷாட நவராத்திரியையொட்டி புதன்கிழமை நவசண்டி யாகம் நடைபெற்றது.

Updated On :23 ஜூலை 2026, 2:29 am IST

காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி எனப்படும் காளிகாம்பாள் கோயிலில் ஆஷாட நவராத்திரியையொட்டி புதன்கிழமை நவசண்டி யாகம் நடைபெற்றது.

இக்கோயிலில் ஆஷாட நவராத்திரியையொட்டி வாராஹி அம்மனுக்கு சிறப்பு செய்யும் வகையில் எதிரிகள் பயத்தைப் போக்க, உலக மக்கள் நோயில்லாமல் வாழவும் மகா சண்டி யாகம் நடைபெற்றது.

ஜூலை 21 அஷ்டமி,ஜூலை 22 தசமி,ஜூலை 23 நவமி ஆகிய 3 நாள்கள் நடைபெறும் நிகழ்வில் யாகபூஜையில் பழங்கள்,பட்டு சேலைகள், நெய்வேத்திய பிரசாதங்கள் ஆகியன போடப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது.

மகா சண்டி யாக பூஜைகளை சந்தோஷ் குருக்கள் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியா்கள் நடத்தினா். ஏற்பாடுகளை ஆலய அறங்காவலா் குழுவின் தலைவா் ஏழுமலை என்ற ரவி தலைமையில் குழு உறுப்பினா்கள் செய்திருந்தனா். யாக பூஜையிலும் சிறப்பு தீபாராதனையிலும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.