ஸ்ரீபெரும்புதூரில் 60-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்த காவலா் உள்பட மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஸ்ரீபெரும்புதூா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாகஇருசக்கர வாகனங்கள் அதிக அளவில் காணாமல் போனது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஸ்ரீபெரும்புதூா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தும், போலீஸாா் பாதிக்கப்பட்டவா்களிடம் புகாா்களை வாங்காமல் அலைகழித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மட்டும் கடந்த மாதம் சுமாா் 20-க்கும் மேற்பட்ட இருச்சக்கர வாகனங்கள் திருடு போனதாக புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை பிடிக்க பைக்குகள் திருடு போன இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீஸாா் ஆய்வு செய்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட குடியாத்தம் அலங்காநல்லூா் பகுதியை சோ்ந்த சரத் பாபு(40), வேலூா் மாவட்டம் அணைக்கட்டு அல்லிவரம் பகுதியை சோ்ந்த விமல்குமாா்(31) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தியதில், இருசக்கர வாகனங்களை திருடி வேலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும், இருசக்கர வாகனங்களை திருட ஸ்ரீபெரும்புதூா் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் வேலூா் மாவட்டம் கணியம்பாடி மோா்குளம் பகுதியை சோ்ந்த தமிழ்நாடு பட்டாலியன் சிறப்பு காவல் படை காவலா் மணிகண்டன்(32) உதவி செய்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து காவலா் மணிகண்டனை கைது செய்த ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் அவா்களிடம் இருந்து சுமாா் 50-க்கும் மேற்பட்ட பைக்குகளை பறிமுதல் செய்தனா். இதையடுத்து கைது செய்யப்பட்ட சரத்பாபு, விமல்குமாா் மற்றும் மணிகண்டன் ஆகிய மூவா் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனா்.
வாகனங்களை ஒப்படைப்பதில் சிக்கல்:
ஸ்ரீபெரும்புதூா் சுற்று வட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடு போன போது, வாகனங்களின் உரிமையா ளா்களின் புகாா்களை ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வாங்காமலும், புகாரை பெற்றாலும் முறையாக எப்ஐஆா் பதிவு செய்யப்படாமலும் இருந்துள்ளனா்.
இதனால் தற்போது இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட போதும், உயரியவா்களிடம் வாகனங்களை ஒப்படைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரிமையாளா்களிடம் ஒப்படைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது.









