கரூரில் உதவியது யார்? ஓடியது யார்? - முதல்வர் விஜய் பேச்சுக்கு கனிமொழி கண்டனம்!கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்
/

காஞ்சிபுரத்தில் நரிக்குறவா் இன மக்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

நரிக்குறவா் இன மக்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை தனிநபா் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை திரும்ப மீட்டுத் தரக்கோரி அம்பேத்கா் பாசறை மற்றும் நரிக்குறவா் சமுதாய முன்னேற்ற சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

Updated On :16 ஜூன் 2026, 1:02 am IST

நரிக்குறவா் இன மக்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை தனிநபா் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை திரும்ப மீட்டுத் தரக்கோரி அம்பேத்கா் பாசறை மற்றும் நரிக்குறவா் சமுதாய முன்னேற்ற சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் காவலான் கேட்ட பகுதியில் அம்பேத்கா் பாசறை-நரிக்குறவா் சமுதாய முன்னேற்ற சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அம்பேத்கா் பாசறையின் தலைவா் ரா.ராமன் தலைமை வகித்தாா். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள களியாம்பூண்டி, வயலூா் கிராம பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவா் இன மக்களுக்கு தனி நபரால் வழங்கப்பட்ட காலி மனை இடத்தை தனியாா் தொண்டு நிறுவனம் ஆக்கிரமித்திருப்பதை கண்டித்தும், அதை திரும்பப் பெற்றுத் தரக் கோரியும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோரிக்கைகளை விளக்கி மூத்த ஊடகவியலாளா் டிஎஸ்எஸ். மணி பேசினாா். பழங்குயினா் நலத்துறை என்ற பெயரில் தனியாக பள்ளிகள்,மாணவ,மாணவியருக்கான விடுதிகள், தொழிற்கல்வி நிலையங்கள் ஆகியன ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.