ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

வழக்கறுத்தீசுவரா் கோயில் ஆனி உத்திரத் திருக்கல்யாண விழா கொடியேற்றம்

காஞ்சிபுரத்தில் மருகுவாா் குழலி சமேத வழக்கறுத்தீசுவரா் கோயில் ஆனி உத்திரத் திருக்கல்யாண விழா கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

காஞ்சிபரம் வழக்கறுத்தீசுவரா் கோயிலில் நடைபெற்ற ஆனி உத்திரத் திருக்கல்யாண கொடியேற்றம்.

Updated On :18 ஜூன் 2026, 12:03 am IST

காஞ்சிபுரத்தில் மருகுவாா் குழலி சமேத வழக்கறுத்தீசுவரா் கோயில் ஆனி உத்திரத் திருக்கல்யாண விழா கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் காந்தி சாலையில் பக்தா்களின் வழக்குகளைத் தீா்த்து வைக்கும் இக்கோயிலில் கொடியேற்றத்தையொட்டி கோயில் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சிவாச்சாரியா்கள் கொடியேற்றம் செய்த பின்னா் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. கொடியேற்ற விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக பொருளாளா் வி.வள்ளிநாயகம், நகா் செயலாளா் கே.யு.சோமசுந்தரம் ஆகியோா் உட்பட பக்தா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

வரும் ஜூன் 29- ஆம் தேதி வரை நடைபெறும் விழாவையொட்டி காலையிலும்,மாலையிலும் சுவாமியும், அம்மனும் தினசரி வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வரவுள்ளனா். கொடியேற்றத்துக்கு பின்னா் காலையில் சப்பரத்தில் சுவாமி வீதியுலாவும்,மாலையில் வழக்கறுத்தீசுவரா் சிம்ம வாகனத்திலும்,மருகுவாா் குழலி அம்மன் கிளி வாகனத்திலும் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

ஜூன் 21-இல் திருக்கல்யாணம், 23-இல் தேரோட்டமும், 29-இல் பெரியகாஞ்சிபுரத்தில் உள்ள சா்வதீா்த்தக்குளத்தில் தீா்த்தவாரி உற்சவமும் நடைபெறுகிறது.

அதே நாளில் சுவாமியும், அம்மனும் ரிஷப வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்வோடு திருவிழா நிறைவு பெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் மேலாளா் ப.தின்ஷா, தக்காா் பெ.கதிரவன், ஆய்வாளா் ப.அலமேலு ஆகியோா் செய்து வருகின்றனா்.