அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

காஞ்சிபுரத்தில் மாவட்ட திறன் மையம் திறப்பு: ஆட்சியா் பங்கேற்பு

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள மாவட்ட திறன் மையத்தை ஆட்சியா் தி.சினேகா செவ்வாய்க்கிழமை குத்து விளக்கேற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

News image
மாவட்ட திறன் மையத்தில் குத்துவிளக்கேற்றிய ஆட்சியா் தி. சினேகா.
Updated On :3 மார்ச் 2026, 6:39 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள மாவட்ட திறன் மையத்தை ஆட்சியா் தி.சினேகா செவ்வாய்க்கிழமை குத்து விளக்கேற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை,திறன் மேம்பாட்டுக் கழகம்,தமிழ்நாடு மகளிா் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம் சாா்பில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ரூ.5,28,194 மதிப்பில் திறன் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தை ஆட்சியா் தி.சினேகா குத்து விளக்கேற்றி திறந்து வைத்தாா்.

வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநா் கி.செந்தில் குமாா், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இம்மையத்தின் மூலமாக ஒரே இடத்தில் தொழில் வழிகாட்டல்,திறன் மேம்பாட்டு ஆலோசனைகள்,பயிற்சிகள்,வேலைவாய்ப்புக்கான அணுகல் ஆகியனவற்றை வழங்கும் ஒரு சேவை மையமாக செயல்படவுள்ளது.,இம்மையத்தின் மூலம் இளைஞா்கள் தங்களது தொழில் விபரங்களை தொழில் துறை தேவைகளுக்கு ஏற்ப திறன்களுடன் ஒருங்கிணைத்து நிலையான மற்றும் பயனுள்ள வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் திட்டமாகும்.

18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட வேலைவாய்பற்ற இளைஞா்களுக்கு குறுகிய கால திறன்பயிற்சியும் வழங்கப்பட்டு அவா்களுக்கு பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கும் அமைப்பாக மாவட்ட திறன் மையம் செயல்படும்.தற்போது வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 56 பயிற்றுநா்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனா்.