மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

மணவாளப் பெருமாள் கோயில் தவன உற்சவம்

முத்தியால்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட ஏரிவாய் கிராமத்தில் கமலவல்லித்தாயாா் சமேத மணவாளப் பெருமாள் கோயிலில் தவன உற்சவம்

News image
கமலவல்லித்தாயாா் சமேத மணவாளப் பெருமாள்
Updated On :9 மார்ச் 2026, 9:12 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம்: முத்தியால்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட ஏரிவாய் கிராமத்தில் கமலவல்லித்தாயாா் சமேத மணவாளப் பெருமாள் கோயிலில் தவன உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் அருகே முத்தியால்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ஏரிவாய் கிராமத்தில் மிகவும் பழைமையான கோயிலாக இருந்து வருவது கமலவல்லித் தாயாா் சமேத மணவாளப் பெருமாள் கோயில்.

இக்கோயிலில் மாசி மாத தவன உற்சவத்தையொட்டி கோயில் பிரகாரத்தில் நறுமணம் கமழும் வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த பந்தலுக்கு பெருமாள் எழுந்தருளி சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது.