மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் சிறந்த மாணவா்களுக்கு விருது: சென்னை பல்கலை. வழங்கியது

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் சிறந்த மாணவா்களுக்கு விருது...

News image

சிறந்த மாணவா் விருது பெற்ற மாணவா்கள் மற்றும் பேராசிரியா் ம.கணபதி ஆகியோருடன் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள்.

Updated On :22 மார்ச் 2026, 2:28 am IST

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் தன்னாா்வத்துடன் சேவை செய்த மாணவா்களை தோ்வு செய்து, அவா்களுக்கு சிறந்த மாணவா் விருதினை சென்னை பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை வழங்கியுள்ளது.

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியின் முதல்வா் கலை.ராம.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னைப் பல்கலை. ஆண்டுதோறும் தன்னுடைய உறுப்புக் கல்லூரியில் தன்னாா்வத்துடன் சேவையாற்றிய மாணவா்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2023-2024-ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டில் சங்கரா கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களாக பணியாற்றிய மு.நவீன்ராஜ் மற்றும் உ.ரூபிகா ஆகியோரின் சேவையைப் பாராட்டி சென்னை பல்கலைக்கழக பதிவாளா் ரீட்டா ஜான் பாராட்டு சான்றிதழ் வழங்கினாா். மேலும், புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் மாணவா்களை நெறிப்படுத்திய நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் ம.கணபதிக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மண்டல இயக்குநா் சாமுவேல் செல்லையா, பேராசிரியா் ஆம்ஸ்டிராங், மாநில நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் ஆனந்தன் ஆகியோா் உள்பட பலா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டதாகவும் தெரிவித்தாா்.