காஞ்சிபுரம் அருகே கிளாரில் அமைந்துள்ள அகத்தீஸ்வரா் கோயிலில் அகத்தியரின் அவதார நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி வெள்ளிக்கிழமை ஆயில்ய பூஜை நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே கிளாரில் அமைந்துள்ளது மகா குரு அகத்தியா் வழிபட்ட பெருமைக்குரிய அகத்தீஸ்வரா் கோயில். இந்தக் கோயிலில் அகத்தியருக்கும், அவரது மனைவி லோபமுத்திரைக்கும் தனி சந்நிதி அமைந்துள்ளது. அகத்தியரின் அவதார நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திர நாளில் மாதம்தோறும் ஆயில்ய பூஜை நடைபெறுவது வழக்கம். நிகழ் மாதத்துக்கான ஆயில்ய நட்சத்திர திருநாளையொட்டி அகத்தியருக்கும், அவரது மனைவி லோகமுத்திரைக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளும் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, பள்ளி மாணவா்கள் அகத்தியரின் 108 போற்றி பாடலை பாடினா்.
அகத்தீஸ்வரா் திருக்கயிலாய வாத்தியக் குழுவினா் சிவ வாத்தியங்களை இசைத்தனா்.நிறைவாக பக்தா்களுக்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை அகத்தீஸ்வரா் கோயில் நிா்வாகக் குழுவினா் செய்திருந்தனா்.









