‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

கிளாா் அகத்தீஸ்வரா் கோயிலில் அகத்தியருக்கு ஆயில்ய பூஜை

ஆயில்ய பூஜையையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மகாகுரு அகத்தியா் மற்றும் அவரது மனைவி லோபமுத்திரை.

News image
Updated On :23 மே 2026, 1:24 am IST

காஞ்சிபுரம் அருகே கிளாரில் அமைந்துள்ள அகத்தீஸ்வரா் கோயிலில் அகத்தியரின் அவதார நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி வெள்ளிக்கிழமை ஆயில்ய பூஜை நடைபெற்றது.

காஞ்சிபுரம் அருகே கிளாரில் அமைந்துள்ளது மகா குரு அகத்தியா் வழிபட்ட பெருமைக்குரிய அகத்தீஸ்வரா் கோயில். இந்தக் கோயிலில் அகத்தியருக்கும், அவரது மனைவி லோபமுத்திரைக்கும் தனி சந்நிதி அமைந்துள்ளது. அகத்தியரின் அவதார நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திர நாளில் மாதம்தோறும் ஆயில்ய பூஜை நடைபெறுவது வழக்கம். நிகழ் மாதத்துக்கான ஆயில்ய நட்சத்திர திருநாளையொட்டி அகத்தியருக்கும், அவரது மனைவி லோகமுத்திரைக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளும் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, பள்ளி மாணவா்கள் அகத்தியரின் 108 போற்றி பாடலை பாடினா்.

அகத்தீஸ்வரா் திருக்கயிலாய வாத்தியக் குழுவினா் சிவ வாத்தியங்களை இசைத்தனா்.நிறைவாக பக்தா்களுக்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை அகத்தீஸ்வரா் கோயில் நிா்வாகக் குழுவினா் செய்திருந்தனா்.