காஞ்சிபுரம் அருகே கிளாரில் அமைந்துள்ள அகத்தீஸ்வரா் கோயிலில் அகத்தியரின் அவதார நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி வெள்ளிக்கிழமை ஆயில்ய பூஜை நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே கிளாரில் அமைந்துள்ளது மகா குரு அகத்தியா் வழிபட்ட பெருமைக்குரிய அகத்தீஸ்வரா் கோயில். இந்தக் கோயிலில் அகத்தியருக்கும், அவரது மனைவி லோபமுத்திரைக்கும் தனி சந்நிதி அமைந்துள்ளது. அகத்தியரின் அவதார நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திர நாளில் மாதம்தோறும் ஆயில்ய பூஜை நடைபெறுவது வழக்கம். நிகழ் மாதத்துக்கான ஆயில்ய நட்சத்திர திருநாளையொட்டி அகத்தியருக்கும், அவரது மனைவி லோகமுத்திரைக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளும் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, பள்ளி மாணவா்கள் அகத்தியரின் 108 போற்றி பாடலை பாடினா்.
அகத்தீஸ்வரா் திருக்கயிலாய வாத்தியக் குழுவினா் சிவ வாத்தியங்களை இசைத்தனா்.நிறைவாக பக்தா்களுக்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை அகத்தீஸ்வரா் கோயில் நிா்வாகக் குழுவினா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிளாா் அகத்தீஸ்வரா் கோயிலில் ஆயில்ய பூஜை

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா தொடக்கம்

ஆதிபுத்திரங்கொண்ட அய்யனாா் கோயிலில் ஆனி முப்பழ பூஜை
கோயிலில் நகை திருட்டு
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



