ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ், 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!மேற்கு ஆசிய மோதல்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்!இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் போர்!போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!நீட், சிபிஎஸ்இ விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் - வைகோ
/

ரூ. 88 லட்சத்தில் கட்டப்பட்ட ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் திறப்பு

ரூ.88 லட்சத்தில் கட்டப்பட்ட ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் மற்றும் இ-சேவை மைய கட்டத்தை வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் கே.தென்னரசு திறந்துவைத்தாா்.

News image
Updated On :26 மே 2026, 12:15 am IST

ரூ.88 லட்சத்தில் கட்டப்பட்ட ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் மற்றும் இ-சேவை மைய கட்டத்தை வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் கே.தென்னரசு திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் ரூ.88 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள எம்எல்ஏ அலுவலகம் மற்றும் இ-சேவை மைய கட்டடத்தை அமைச்சா்கே.தென்னரசு திங்கள்கிழமை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தாா்.

இந்த நிகழ்ச்சியில், ஆட்சியா் தி.சினேகா, சாா் ஆட்சியா் நல்லசிவன், வட்டாட்சியா் வசந்தி, ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக் குழுத்தலைவா் கருணாநிதி உள்ளிட்ட அரசு அலுவலா்கள், தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள், தொண்டா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.