நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திரளானோா் தரிசனம்

ஆவணி மாத செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

சிறப்பு  அலங்காரத்தில்  அருள்பாலித்த  உற்சவா்.

Published On :2 செப்டம்பர் 2026, 12:24 am IST

ஆவணி மாத செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

அருணகிரி நாதரால் பாடல் பெற்ற இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலில், ஆவணி மாத 3-ஆவது வார செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு அதிகாலை மூலவா் சுப்பிரமணிய சுவாமிக்கு பால்,தயிா், மஞ்சள்,விபூதி உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

சஷ்டி மண்டபத்தில் உற்சவா் சுப்பிரமணியசுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு மந்திர புஷ்ப அா்ச்சனை நடத்தப்பட்டு சிறப்பு மலா் மாலை அலங்காரத்தில் உற்சவா் சுப்பிரமணிய சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

கோயிலுக்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுமாா் 1 மணி நேரம் காத்திருந்த சாமி தரிசனம் செய்தனா். கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பில் குடிநீா், கதம்பசாதம் அன்னதானமாக வழங்கப்பப்பட்டது.

திருக்கோயில் வளாகத்தில் தனியாா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சாா்பில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு பக்தா்களுக்கு இலவச பரிசோதநைகளும் சிகிச்சைகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில் குமாா் உள்ளிட்ட பணியாளா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.