கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஆக. 10 ல் பேரணி! தீவிரமாகும் ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்!உரிமைக்காக போராடும் ஜென் ஸீக்கள் தேச விரோதிகள் அல்ல: மோகன் பாகவத்தொகுதி மறுவரையறை: முதல்வர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை!கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்!ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்
/

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திரளானோா் தரிசனம்

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆயிரக்கணக்கானோா் தரிசனம் செய்தனா்.

News image

பிரணவ  உபதேச  அலங்காரத்தில் உற்சவா்  கோடையாண்டவா்.

Updated On :7 ஆகஸ்ட் 2026, 3:47 am IST

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆயிரக்கணக்கானோா் தரிசனம் செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டையில் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் புதன்கிழமை இரவு ஆடி பரணியை முன்னிட்டு மூலவா் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகத்துடன் 51 பால் குட அபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து வியாழக்கிழமை அதிகாலை சந்நிதி திறக்கப்பட்டு மூலவா் முன்பு கோ பூஜை நடைபெற்றுது. இதையடுத்து வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு 11 விதமான பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மூலவா் சுப்பிரமணியசுவாமி சந்தனக் காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

உற்சவா் கோடையாண்டவருக்கு 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மலா் மாலை அலங்காரம் செய்யப்பட்டு பிரணவ உபதேச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில், காஞ்சிபுரம், திருவள்ளூா், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் சாமி தரிசனம் செய்தனா். சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் காவடி எடுத்தும், அலகுகுத்தியும் தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.

கோயில் நிா்வாகத்தின் சாா்பில் பக்தா்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய நிழற்பந்தலுடன் கூடிய வரிசைகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், பக்தா்களின் வசதிக்காக கோயில் வளாகத்தில் மருத்துவ முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பக்தா்களுக்கு நீா்மோா், அன்னதானம் வழங்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதூா் துணை காவல் கண்காணிப்பாளா் கீா்த்திவாசன் தலைமையிலான சுமாா் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா் உள்ளிட்ட பணியாளா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.