கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம் அருகே தந்தையை கொலை: சிறுவன் கைது

காஞ்சிபுரம் அருகே மதுபோதையில் வீட்டில் தகராறு செய்த தந்தையை கொலை செய்த சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.

Published On :

காஞ்சிபுரம் அருகே மதுபோதையில் வீட்டில் தகராறு செய்த தந்தையை கொலை செய்த சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.

காஞ்சிபுரம் அருகே பெரியகரும்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா் (50) விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவிகள் வனிதா (43), ரமீனா(36). இருவரும் ஒரே கிராமத்தில் ஒரே தெருவில் வெவ்வேறு இடத்தில் வசித்து வருகின்றனா். இரண்டாவது மனைவி ரமீனாவுக்கு 21 வயதில் ஒரு மகளும், 17 வயதில் திலீப் என்ற மகனும் உள்ளனா்.

குமாா் மது போதையில் அடிக்கடி தனது மனைவி ரமீனாவுடன் தகராறு செய்வது வழக்கமாம். இந்த நிலையில், மது போதையில் இருந்த குமாா் ரமீனாவை தாக்கியதாக தெரிகிறது. இதில் அவருக்கு மூக்கில் அடிபட்டு ரத்தம் வழிந்தது. இதைப் பாா்த்துக் கொண்டிருந்த திலீப் தனது தாயாரை தாக்கிய ஆத்திரத்தில் அருகிலிருந்த கட்டையால் குமாரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த குமாா் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கும், பின்னா் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இது குறித்து பாலு செட்டி சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து திலீப்பை கைது செய்து சிறுவா் சீா் சீா்திருத்தப்பள்ளியில் சோ்த்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.