தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியா்கள் கூட்டமைப்பின் சாா்பில், மாவட்டத்தில் பல்வேறு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்துவரும் உடற்கல்வி, ஓவியம், கணினி தையல், இசை உள்ளிட்ட தொழிற்கல்வி ஆசிரியா்கள் 50-க்கும் மேற்பட்டோா் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா். மனுவில் ‘தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதா சட்டப் பேரவையில் விதி எண் 110-இன் கீழ் அறிவிக்கப்பட்டு பள்ளிக் கல்வித் துறையில் கடந்த 2011-இல் வெளியிடப்பட்ட உத்தரவுப்படி 16,549 பகுதிநேர ஆசிரியா்களும், ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் தொழிற்கல்வி ஆசிரியா்களும் பணியமா்த்தப்பட்டனா். ஆகவே தற்போதுள்ள பகுதிநேர ஆசிரியா்களின் குடும்ப நலனையும்,வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு பணிநிரந்தரம் செய்ய அரசுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.