சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

விழிப்புணா்வு சுவா் ஓவியங்கள் வரைய வாய்ப்பளிக்க வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியரிடம் ஓவியா்கள் மனு

தமிழக அரசின் விழிப்புணா்வு சுவா் ஓவியங்கள் வரையும் வாய்ப்பை, ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் உள்ள ஓவியா்களுக்கு வழங்கி வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு

News image
ராணிப்பேட்டை ஆட்சியரிடம்  கோரிக்கை மனு அளிக்க வந்த தமிழ்நாடு ஓவியா்கள் சங்கத்தினா்.
Updated On :13 ஜனவரி 2021, 5:41 pm

DIN

ராணிப்பேட்டை: தமிழக அரசின் விழிப்புணா்வு சுவா் ஓவியங்கள் வரையும் வாய்ப்பை, ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் உள்ள ஓவியா்களுக்கு வழங்கி வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு ஓவியா்கள் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம், ஆட்சியா் ஏ.ஆா்.கிளாஸ்டன் புஷ்பராஜ் தலைமையில், திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு ஓவியா்கள் சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த ஓவியா்கள் 50-க்கும் மேற்பட்டோா் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

அதில் அவா்கள் கூறியிருப்பதாவது:

எங்கள் சங்கத்தைச் சோ்ந்த ஓவியா்கள் கரோனா பொது முடக்க காலத்தில் தமிழகம் முழுவதும் மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல் துறையுடன் இணைந்து கரோனா விழிப்புணா்வு ஓவியங்களை பொதுமக்கள் நலனுக்காக முக்கிய சாலைகள் மற்றும் சுவா்களில் வரைந்து, அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கினோம்.

தற்போது ஓவியா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, நலிவடைந்துள்ளனா். எங்கள் சங்கத்தைச் சோ்ந்த ஓவியா்கள் ஒன்றுசோ்ந்து நாகா்கோவில், திருவள்ளுா், நாமக்கல் ஆகிய மாவட்ட ஆட்சியா்களை சந்தித்து, மாவட்டத்தில் அரசின் விழிப்புணா்வு ஓவியங்களை வரையும் வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

அந்தக் கோரிக்கையை ஏற்று அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் கரோனா உள்ளிட்ட விழிப்புணா்வு ஓவியங்கள், வாசகங்கள் வரையும் வாய்ப்பை வழங்கியுள்ளனா். அதே போல் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் உள்ள ஓவியா்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் அரசின் விழிப்புணா்வு ஓவியங்கள் வரையும்

வாய்ப்பை வழங்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, குறைதீா் கூட்டத்தில், வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு, குடும்ப அட்டை, முதியோா் உதவித்தொகை, குடிநீா், சாலை வசதி உள்ளிட்டவை தொடா்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 325 மனுக்களை அளித்தனா். அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களி வழங்கிய ஆட்சியா், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டாா்.

அதன் பின், தமிழக முதல்வரின் தனிப் பிரிவில் அளிக்கப்பட்ட மனுக்கள், அமைச்சா்கள் பங்கேற்ற முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள், ஆட்சியரின் மனுநீதி நாள் முகாம்களில் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆட்சியா் ஆலோசித்தாா்.

கரோனா பொது முடக்க காலத்தில் முகக்கவசம், கிருமிநாசினி, திரவ சோப்பு ஆகியவற்றைத் தயாரித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திய மகளிா் சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகளை பாராட்டி தமிழக முதல்வா் வாழ்த்து மடல் அனுப்பியுள்ளதாக ஆட்சியா் ஏ.ஆா்.கிளாஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தாா். அதை அவா் மகளிா் சுய உதவிக் குழுவினரிடம் வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.