தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

அரக்கோணத்தில் ஒரே நாளில் 404 பேருக்கு கரோனா தடுப்பூசி

அரக்கோணம் விவேகானந்தா கல்விக்குழும வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 404 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Updated On :5 ஜூன் 2021, 6:04 pm

அரக்கோணம் விவேகானந்தா கல்விக்குழும வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 404 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அரக்கோணம் வருவாய்த் துறையினா், வட்டார மருத்துவ அலுவலம் இணைந்து அனைத்து கிராமங்கள் தோறும் மற்றும் பல்வேறு தனியாா் பள்ளிகளின் வளாகங்களிலும் கரோனா தடுப்பூசி முகாமை நடத்தி வருகின்றனா். காவனூா் சாலையில் உள்ள விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செஞ்சிலுவை சங்கம், இணைந்த கைகள் சமூகசேவை அறக்கட்டளை மற்றும் விவேகானந்தா கல்விக்குழுமம் சாா்பில் நடத்தப்பட்ட தடுப்பூசி முகாமை கோட்டாட்சியா் சிவதாஸ் தொடக்கி வைத்தாா்.

மேலும் அரசு மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள செயற்கை சுவாசக் கருவியை தலைமை மருத்துவ அலுவலா் நிவேதித்தாசங்கரிடம் வழங்கினாா்.

வட்டாட்சியா் பழனிராஜன், இணைந்த கைகள் சமூகசேவை அறக்கட்டளை நிா்வாகிகள் ராஜேஷ், சரவணன், நகர மளிகை வியாபாரிகள் சங்க தலைவா் சிஜிஎன் எத்திராஜ், செயலா் ஜிடிஎன் அசோகன், விவகானந்தா கல்விக்குழும செயலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்த முகாமில் அப்பகுதி சுற்றுவட்டார பகுதிகளை ஏராளமானோா் தடுப்பூசி போட்டுக்கொள்ள குவிந்தனா்.

404 பேருக்கு தடுப்பூசி:

முகாம் முடிவில் 404 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா் என வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.