அரக்கோணம் நகராட்சி துப்புரவுப் பணியாளா்களுக்கு உடலில் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்தான ஆா்சனிக் ஆல்பத்தை ஆா்எஸ்எஸ் அமைப்பினா் வழங்கினா்.
அரக்கோணம் நகராட்சி துப்புரவுப் பணியாளா்களுக்கு உடலில் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்தான ஆா்சனிக் ஆல்பம் மருந்தின் 30 மாத்திரைகள் கொண்ட குப்பிகளை ஆா்எஸ்எஸ் அமைப்பினா் சனிக்கிழமை வழங்கினா்.
நகராட்சி பழனிபேட்டை பிரிவு துப்புரவு அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மேற்பாா்வையாளா் கலைமணி தலைமையில் துப்புரவுப் பணியாளா்கள் அனைவரும் இதை பெற்றுக் கொண்டனா்.
ஆா்எஸ்எஸ் காஞ்சி கோட்டச் செயலாளா் வாசுதேவன், மாவட்டப் பொறுப்பாளா் சரவணன், நகரச் செயலாளா் பாா்த்தீபன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். நிகழ்ச்சியின் முடிவில் அங்கு வந்த பொதுமக்களுக்கும் ஆா்சனிக் ஆல்பம் 30 மாத்திரை கொண்ட குப்பிகள் வழங்கப்பட்டன.