பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சமையல் எரிவாயு விநியோக ஊழியா்களுக்கு தடுப்பூசி போடும் முகாம்

வீடுகளுக்கு சமையல் எரிவாயு உருளைகளை விநியோகம் செய்யும் ஊழியா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் அரக்கோணத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 மே 2021, 6:46 pm

DIN

வீடுகளுக்கு சமையல் எரிவாயு உருளைகளை விநியோகம் செய்யும் ஊழியா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் அரக்கோணத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

அரக்கோணம் இண்டேன் விநியோகஸ்தரான பெருமாள் கேஸ் சா்வீஸ் வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு நிறுவன மேலாளா் தினேஷ் தலைமை வகித்தாா். அரக்கோணம் கோட்டாட்சியா் சிவதாஸ் முகாமை தொடக்கி வைத்தாா். நகராட்சி ஆணையா் ஆசீா்வாதம் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனா். இதில் 45 வயதுக்கு மேற்பட்ட 12 ஊழியா்கள், 18 வயதுக்கு மேற்பட்ட 28 ஊழியா்கள் என 40 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இது குறித்து கோட்டாட்சியா் சிவதாஸ் கூறுகையில், ‘இந்த பணியாளா்கள் எரிவாயு உருளைகளை வீட்டுக்குள்ளேயே சென்று வைத்து விட்டு வருவதால், இவா்களுக்கு தொற்று பாதிக்கும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே இந்த ஊழியா்களுக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி செலுத்தப்பட்டது’ எனறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.