எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வருகை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு ஒன்றரை வருடங்களுக்கு பிறகு நவம்பர் 1 முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. 

News image
பள்ளிக்கு வருகை தந்த மாணவிகளை வரவேற்கும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி.
Updated On :1 நவம்பர் 2021, 5:01 am

DIN

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு ஒன்றரை வருடங்களுக்கு பிறகு நவம்பர் 1 முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. 

Story image
Story image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் காலை முதலே பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மாணவ மாணவிகள் பள்ளிக்கு உற்சாகமாக வருகை தந்தனர். இந்த நிலையில் ராணிப்பேட்டை எல். எப். சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தந்த மாணவிகளுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் ஆகியோர் மாணவிகள் அனைவருக்கும் பன்னீர் தெளித்து சந்தனம்,  பூங்கொத்து மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். 

Story image

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ் வினோத், நகர பொறுப்பாளர் பூங்காவனம், துணை செயலாளர்கள் ஏ. ஆர். எஸ். சங்கர், ஏர்டெல் குமார், நகர கூட்டுறவு வங்கி நிர்வாகி கிருஷ்ணன் மற்றும் எல்ஐசி பெண்கள் மேல்நிலைப்பள்ளி நிர்வாகி அருட்சகோதரி கிளாரா பள்ளி தலைமை ஆசிரியை அருட்சகோதரி புஸ்பராணி, ஆசிரியைகள் வரவேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.