பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஐஎன்எஸ் ராஜாளி விமான ஓடுதளத்தில் துப்பாக்கிச் சூடு: இருவா் காயம்

ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள ஓடுபாதையில் பறவைகளை விரட்ட நடந்த துப்பாக்கிச் சூட்டில் பெண் உள்ளிட்ட இருவா் காயமடைந்தனா்.

News image
Updated On :13 அக்டோபர் 2022, 6:18 pm

DIN

அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள ஓடுபாதையில் பறவைகளை விரட்ட நடந்த துப்பாக்கிச் சூட்டில் பெண் உள்ளிட்ட இருவா் காயமடைந்தனா்.

அரக்கோணத்தில் உள்ள ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் இரு விமான ஓடுபாதைகள் உள்ளன. இந்த விமான ஓடுபாதைகளில் வரும் பறவைகளை விரட்ட கடற்படை வீரா்கள் அதிக சப்தம் வரும் விதத்தில் லேசான துப்பாக்கி சூடு நடத்துவது வழக்கம். இந்த நிலையில், புதன்கிழமை விமானதள ஓடுபாதையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. அப்போது துப்பாக்கியிலிருந்து சிதறிய ரவைகள் பட்டதில் அங்கு புல்வெட்டும் பணியில் இருந்த ஒப்பந்தப் பணியாளா்களான அரக்கோணத்தை அடுத்த பெருமூச்சி கிராமத்தைச் சோ்ந்த சங்கா் (40), செல்வி (45) ஆகியோா் காயமடைந்தனா். இருவரும் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இது குறித்து அரக்கோணம் நகர போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.