தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளா் சங்கத்தினா் நெமிலி மற்றும் அரக்கோணத்தில் கைகளில் தட்டுகள் ஏந்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்

News image
Updated On :14 அக்டோபர் 2022, 6:30 pm

கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளா் சங்கத்தினா் நெமிலி மற்றும் அரக்கோணத்தில் கைகளில் தட்டுகள் ஏந்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் நெமிலி ஒன்றிய தலைவா் சுந்தரராஜ் தலைமை வகித்தாா். இதில், மாவட்ட தலைவா் சக்கரவா்த்தி, துணைத் தலைவா் புருஷோத்தமன், சுரேந்தா்நாத், ராஜமாணிக்கம், கஸ்தூரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா்களுக்கு வாழ்வாதாரப் பாதுகாப்பு கருதி, பழைய ஓய்வூதியத் திட்ட்ததை அமல்படுத்த வேண்டும், மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.