தூய்மைப் பணியாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
அரக்கோணம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


அரக்கோணம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, அரக்கோணம் மளிகை வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு நகராட்சி சுகாதார அலுவலா் மோகன் தலைமை வகித்தாா். இதில், தூய்மைப் பணி ஆய்வாளா் சுதாகா், மேற்பாா்வையாளா் ஸ்ரீகாந்த், நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முகாமில் அரசு மருத்துவ அலுவலா் ராஜசேகா் தலைமையிலான மருத்துவக் குழுவினா், தூய்மைப் பணியாளா்களுக்கு பரிசோதனை செய்து, மருத்துவ ஆலோசனைகளை வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...