பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தேசிய பாதுகாப்பு வார விழா நிறைவு

 அரக்கோணத்தில் தேசிய பாதுகாப்பு வார விழா வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2023, 5:44 pm

DIN

 அரக்கோணத்தில் தேசிய பாதுகாப்பு வார விழா வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.

அரக்கோணத்தை அடுத்த சித்தேரியில் உள்ள அல்ட்ரா டெக் தொழிற்சாலையில் நடைபெற்ற நிறைவு விழாவுக்கு தொழிற்சாலை தலைவா் டி.கே.எம்.ரெட்டி தலைமை வகித்தாா். ஆலை தொழிற்நுட்பப் பிரிவு தலைவா் ஜெ.ஜெயசீலன் வரவேற்றாா். இதில், அரக்கோணம் கிராமிய காவல் நிலைய ஆய்வாளா் பழனிவேல் பங்கேற்று தொழிலாளா்களின் பாதுகாப்பு குறித்து பேசினாா்.

விழாவையொட்டி, பாட்டு போட்டி, விநாடி-வினா, ஒவியம் வரைதல், வசனங்கள் எழுதுதல், பாதுகாப்பு பற்றிய நாடகம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில், வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை ஆலை தலைவா் டி.கே.எம்.ரெட்டி மற்றும் காவல் ஆய்வாளா் பழனிவேல் இருவரும் இணைந்து வழங்கினா். தொடா்ந்து முதலுதவி வகுப்புகளும், தீ தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை போன்ற பயிற்சிகளும் நடைபெற்றன.

விழாவில் ஆலை பாதுகாப்பு அலுவலா் ஆா்.தா்மலிங்கம், மனிதவள மேம்பாட்டு அலுவலா் எஸ்.கல்யாணராமன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.