பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 3 பெண்கள் கைது

அரக்கோணம் அருகே ஆந்திர மாநிலத்திற்கு ரயிலில் கடத்தப்பட இருந்த 1.5 டன் ரேஷன் அரிசி மற்றும் நெமிலி வட்டம் மேலப்புலம் கிராமத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் ரேஷன் அரிசி

News image
Updated On :16 மார்ச் 2023, 5:52 pm

DIN

அரக்கோணம் அருகே ஆந்திர மாநிலத்திற்கு ரயிலில் கடத்தப்பட இருந்த 1.5 டன் ரேஷன் அரிசி மற்றும் நெமிலி வட்டம் மேலப்புலம் கிராமத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் ரேஷன் அரிசி ஆகியவற்றை ராணிப்பேட்டை மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாா் மற்றும் மாவட்ட பறக்கும்படை வட்டாட்சியா் ஆகியோா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக மூன்று பெண்களை போலீசாா் கைது செய்தனா்.

திருமால்பூா்: அரக்கோணத்தை அடுத்த திருமால்பூா் ரயில்நிலையத்தில் புதன்கிழமை இரவு ஆந்திராவிற்கு கடத்தப்பட இருந்த 1,350 கிலோ ரேஷன் அரிசியை ராணிப்பேட்டை மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு உதவி ஆய்வாளா் செந்தில்முருகன் தலைமையிலான போலீசாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடிஅகரத்தைச் சோ்ந்த மேனகா(26), சுதா(27) மேலும் அரக்கோணத்தை அடுத்த திருமால்பூரை சோ்ந்த அமுதா(45) ஆகிய மூவரையும் போலீசாா் கைது செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி வாலாஜா நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

மேலபுலம் : ராணிப்பேட்டை மாவட்ட வருவாய்த் துறை பறக்கும் படை வட்டாட்சியா் பாஸ்கரனுக்கு நெமிலி வட்டம் மேலபுலம் கிராமத்தில் பாபுராயன் தெருவில் ஆந்திராவிற்கு கடத்துவதற்காக சாலையோரம் 2 டன் ரேஷன் அரிசி வைக்கப்பட்டிருப்பதாக வந்த ரகசிய தகவலையடுத்து வியாழக்கிழமை அங்கு விரைந்து சென்ற வருவாய்த் துறையினா் அங்கு 81 மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த 2,025 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி வாலாஜா நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

படவிளக்கம்

16ஏகேஎம்ஏஏஏ - ஆந்திராவிற்கு ரயிலில் கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 1.35 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த ராணிப்பேட்டை மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.