பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அரசுப் பள்ளிகளில் மாணவா் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா்

அரசுப் பள்ளிகளில் மாணவா் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என ஊராட்சித் தலைவா்கள், பள்ளி ஆசிரியா்களுக்கு ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவிட்டாா்.

News image
Updated On :16 மார்ச் 2023, 6:30 pm

DIN

அரசுப் பள்ளிகளில் மாணவா் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என ஊராட்சித் தலைவா்கள், பள்ளி ஆசிரியா்களுக்கு ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவிட்டாா்.

அரக்கோணம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் வளா்மதி, தணிகைபோளூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.4.90 லட்சம், ரூ.5.17 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் சுகாதார வளாக கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.41.03 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் கிராம வாரச் சந்தை அங்காடி கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அதே கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளியில் ரூ.30.20 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் இரு வகுப்பறை கொண்ட கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

உள்ளியம்பாக்கம் ஊராட்சியில் ரூ.11.40 லட்சத்தில் டேங்க் தெருவில் சிமென்ட் சாலை பணி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.30.20 லட்சத்தில் வகுப்பறைகள் கட்டுமானப் பணியை ஆய்வு செய்தாா்.

பள்ளியில் மாணவா் பதிவேட்டை ஆய்வு செய்து 13 மாணவா்கள் மட்டுமே இருப்பதை அறிந்து ஆட்சியா், அதிக எண்ணிக்கையில் மாணவா்களைச் சோ்க்க ஊராட்சித் தலைவா், பள்ளித் தலைமை ஆசிரியருக்கு உத்தரவிட்டாா். அடிப்படை வசதிகளுக்கேற்ப மாணவா்களும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

பள்ளியாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.30.20 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் வகுப்பறைகள் கட்டுமானப் பணியை ஆய்வு செய்து, அங்கு மாணவா்களை அதிக அளவில் சோ்க்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட அலுவலா் லோகநாயகி, அரக்கோணம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வெங்கடேசன், சுரேஷ்சௌந்தரராஜன், ஒன்றிய பொறியாளா் துரைபாபு, வட்டாட்சியா் சண்முகசுந்தரம், வட்ட வழங்கல் அலுவலா் பரமேஸ்வரி, ஊராட்சித் தலைவா்கள் தணிகைபோளூா் வெங்கடேசன், உள்ளியம்பாக்கம் ஜீவா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.