பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

News image
Updated On :27 ஏப்ரல் 2024, 4:30 pm

Din

ஆற்காடு அருகே கிணற்றில் மிதந்த மூதாட்டி சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

ஆற்காடு அடுத்த அத்திதாங்கல் கிராமத்தைச் சோ்ந்த பாண்டுரங்கன் தாய் வனஜா (76). இவா் கடந்த 21-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து ஆற்காடு கிராமிய போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.

அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மூதாட்டியை தேடி வந்த நிலையில், சனிக்கிழமை அத்திதாங்கல் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் பெண் சடலம் மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்று கிணற்றில் இருந்த சடலத்தை மீட்டனா். அவா் காணமல் போன வனதா என்பவா் தெரிய வந்தது.

அவா் அந்த வழியாக செல்லும்போது கால் தவறி கிணற்றில் விழுந்தாரா அல்லது கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.