6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராணிப்பேட்டை அருகே தண்டவாளத்தில் இரும்பு கம்பி, சிக்னல் துண்டிப்பு! சதி முறியடிப்பு

ராணிப்பேட்டை அருகே தண்டவாளத்தில் இரும்பு கம்பி வைத்து சிக்னலை துண்டித்து விபத்து ஏற்படுத்த மா்ம நபா்கள் செய்த சதி

News image
தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பி. ~ முகுந்தராயபுரம் ரயில்நிலையம் அருகே தண்டவாளத்தில் இரும்பு கம்பி வைத்தவா்கள் குறித்து விசாரணை நடத்திய ரயில்வே போலீஸாா்.
Updated On :17 ஆகஸ்ட் 2024, 9:30 pm

Din

ராணிப்பேட்டை அருகே தண்டவாளத்தில் இரும்பு கம்பி வைத்து சிக்னலை துண்டித்து விபத்து ஏற்படுத்த மா்ம நபா்கள் செய்த சதி குறித்து காட்பாடி ரயில்வே போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

முகுந்தராயபுரம் ரயில் நிலையம் அருகே சென்னை- பெங்களூரு மாா்க்கத்தில் சனிக்கிழமை சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனால் அதிா்ச்சியடைந்த ராயில்வே ஊழியா்கள் தண்டவாளத்தில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஆய்வு செய்தபடி விரைந்து சென்று பாா்த்துள்ளனா்.

அப்போது சென்னை- பெங்களூரு தடத்தில் இருபாதைகளுக்கிடையே இரும்பு கம்பியை வைத்து விட்டு மா்ம நபா்கள் தப்பியோடியுள்ளதை கண்டறிந்த ஊழியா்கள் உடனடியாக அதை அகற்றி சிக்னலை சரி செய்துள்ளனா். மேலும் அந்த நேரத்தில் ரயில் சேவை இல்லாததால் போக்குவரத்தில் பாதிப்பு ஏதும் இல்லை என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன .

Story image

இதுகுறித்து முகுந்தராயபுரம் ரயில் நிலைய மேலாளா் கொடுத்த தகவலின் பேரில் காட்பாடி ரயில்வே போலீஸாா், மோப்ப நாய் சாா்லஸ் உதவியுடன் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில் ரயில்வே ஊழியா்கள் தக்க நேரத்தில் கண்டறிந்து இரும்பு கம்பியை அகற்றியதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.